பெண்கள் காவல் துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு-தமிழக அரசு சிறப்பு பதக்கம் வழங்க முடிவு

பெண்கள் காவல் துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசு சிறப்பு பதக்கம் வழங்க முடிவு செய்துள்ளது.
பெண்கள் காவல் துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு-தமிழக அரசு சிறப்பு பதக்கம் வழங்க முடிவு
Published on

சென்னை, 

தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, புலனாய்வு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் மொத்தம் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். இதில் பெண் போலீசாரும் பணியில் உள்ளனர். தமிழக காவல் துறை பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டிற்கு ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு வழங்கப்படும் உயரிய கவுரவமான 'குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி' தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழக காவல் துறையில் பெண்கள் முதன் முதலில் 1973 ஆம் ஆண்டுதான் சேர்க்கப்பட்டனர். அப்போது ஒருகாவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ), ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என 22 பெண் போலீசாரே பணியில் சேர்ந்தனர். ஆனால் தற்போது 35,329 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் முடிவடைகின்றது. கடந்த மார்ச் மாதம் இதற்காக பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவர்களை கவுரவிக்கும் விதமாக பெண் காவலர்கள் அனைவருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது பெண்களின் முன்னேற்றத்திற்கு மேலும் உந்துதலாக இருக்கும் என அதிகாரிகள் கருத்து  தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com