நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நிறைவு: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பு

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நிறைவு: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், கொரோனா நோயாளிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களித்தனர். 5 மணிக்கு முன் வந்த பொது வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com