வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

கொடைக்கானல் கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது.
வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு
Published on

கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 6-ந்தேதி தொடங்கியது. அதன்படி அந்த கோட்டத்தில் உள்ள பழனி வனச்சரகம் உள்பட 7 வனச்சரகங்களிலும் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

அடர்ந்த வனப்பகுதியில் விலங்குகளின் கால்தடம், எச்சம், நேரடியாக பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கப்பட்டன. வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது. அடுத்த கட்டமாக வனப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு விலங்குகள் கணக்கெடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com