இந்தி திணிப்புக்கு கண்டனம்; கடமை வாயில் என பெயர் மாற்றம் செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காலம் காலமாக இந்தி திணிப்பை எதிர்த்து வரும் தமிழ்நாட்டில் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தி திணிப்புக்கு கண்டனம்; கடமை வாயில் என பெயர் மாற்றம் செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடர்வண்டித்துறையின் கோட்ட தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காலம் காலமாக இந்தி திணிப்பை எதிர்த்து வரும் தமிழ்நாட்டில் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு பெயர் சூட்டும்போது மாநில உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் திருச்சி கோட்ட தொடர் வண்டித்துறை தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு கடமை வாயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

Also Read
இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்; ஈரானில் 181 குழந்தைகள் உள்பட 1,097 பேர் பலி
இந்தி திணிப்புக்கு கண்டனம்; கடமை வாயில் என பெயர் மாற்றம் செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com