அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது
அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
Published on

வருசநாடு அருகே உள்ள மூலக்கடையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் தனது கையில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு 3 நாட்கள் உள்நோயாளியாக இருந்தேன். அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இந்நிலையில், என்னை சிகிச்சையில் இருந்து அனுப்பி விட்டனர். இந்த சிகிச்சை குறைபாட்டை கண்டித்து தீக்குளிக்க முயன்றேன்" என்றார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com