பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

காவேரிப்பட்டணம் பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் செயல் அலுவலர் செந்தில்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் இளங்கோ மற்றும் அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com