மாணவிகளுக்கு பாராட்டு

சிவகிரி அருகே மாணவிகளுக்கு பாராட்டு
மாணவிகளுக்கு பாராட்டு
Published on

சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் உள்ள ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

பொதுத்தேர்வில் பெமினா 472 மதிப்பெண்களும், மரிய இனிக்கோ தவமீனா 467 மதிப்பெண்களும், காவியாதேவி 465 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் அருள் அலெக்சாண்டர், தலைமை ஆசிரியர் செ.பூபதி ராஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com