காங்கிரசார் கொண்டாட்டம்

காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
காங்கிரசார் கொண்டாட்டம்
Published on

கடையம்:

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடையம் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கடையம் வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில சோனியா காந்தி பேரவை செயலாளர் டி.கே. பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம், மாநில பேச்சாளர் தங்கம்மாள், அந்தோணி, மும்பை ராமையா, சிவக்குமார், சாத்தா, முருகன், ராமசாமி, வட்டார மகளிர் அணி துணைச் செயலாளர் உச்சி மாகாளி, காமராஜா- எம்.ஜி.ஆர். தொண்டு நிறுவனர் செல்வின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com