காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

இளையான்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்றார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு
Published on

இளையான்குடி

இளையான்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இளையான்குடி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டி தொடர்பாகவும் வருகின்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது எனவும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி, காரைக்குடி மாங்குடி எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் அல்அமீன், பேரூராட்சி வட்டார பொறுப்பாளர் குமார், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டி, சிறுபான்மை பிரிவு தலைவர் ராவுத்தர் நயினார் அம்பலம், பேரூராட்சி கவுன்சிலர்கள் கீழாயூர் சேக், இப்ராஹிம் சா, பொருளாளர் ஹமீது மற்றும் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் காங்கிரஸ் மாவட்டச்செயலாளர் குமாரக்குறிச்சி கருணாகரனின் தாயார் தனிக்கொடி அம்மாளின் மறைவிற்காக கார்த்தி சிதம்பரம் எம்.பி. துக்கம் விசாரித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com