காங்கிரஸ் கட்சியை இனி எந்த காலத்திலும் சேர்க்க கூடாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வினரின் உழைப்புதான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

காங்கிரஸ் கட்சியை இனி எந்த காலத்திலும் சேர்க்க கூடாது:  உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

சென்னை

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் துணை-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, காங்கிரஸ் கட்சியை இனி எந்த காலத்திலும் சேர்க்க கூடாது. பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற கட்சி காங்கிரஸ். கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வினரின் உழைப்புதான் காரணம். காங்கிரசுக்கு தமிழக மக்கள் நிச்சயம் பாடம் கற்று கொடுப்பார்கள் என பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com