ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார்.
ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம்
Published on

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏப்ரல் 15-ந்தேதி(இன்று) ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com