கடலூர் அருகே சுக பிரம்ம மகரிஷி கோவில் கும்பாபிஷேகம்

கடலூர் அருகே சுக பிரம்ம மகரிஷி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடலூர் அருகே சுக பிரம்ம மகரிஷி கோவில் கும்பாபிஷேகம்
Published on

நெல்லிக்குப்பம்

கடலூர் அடுத்த பில்லாலி தொட்டியில் ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, துவார பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடைபெற்றது.

பின்னர் பூர்ணாகுதி நடந்து, யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சுக பிரம்ம மகரிஷி கோவில் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பரிவார மூர்த்திகள் விநாயகர், வள்ளி தேவசேனா, சமேத ஸ்ரீ சக்தி சரவணபவனர், வெங்கடேச பெருமாள் ஆகிய சன்னதியில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com