தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வருகை

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வருகை
Published on

சென்னை,

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கேரள, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்-மந்திரிகளுக்கு, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரும் கலந்து கொள்ள உள்ளனர்.

அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com