ஆற்காட்டில் ரூ.12 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஆற்காட்டில் ரூ.12 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
ஆற்காட்டில் ரூ.12 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்
Published on

ஆற்காடு

ஆற்காட்டில் ரூ.12 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 14- வது வார்டு தந்தை பெரியார் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைத்தல், கால்வாய் அமைத்தல், சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர் கண்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com