அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு
Published on

சென்னை,

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு வரும் 5-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com