கோர்ட்டு புறக்கணிப்பு

சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
கோர்ட்டு புறக்கணிப்பு
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் வக்கீல் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவையும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசுவதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதிவரை 3 நாட்கள் கோட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் நேற்று கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com