நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை,

இலங்கை அருகே உள்ள கடல் பகுதியில் நில விய வளிமண்டல கீழடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

நெல்லையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்திலும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் காலை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதமான காற்று வீசியது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 44.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.52 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 57.87 அடியாக உயர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளான கடனா அணை 32.30 அடியாவும். கருப்பாநதி 34.45 அடியாகவும், குண்டாறு 19 அடியாகவும் உயர்ந்தது. மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது.

மழை அளவு விவரம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 173 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாலுமுக்கு பகுதியில் 164 மி.மீ., காக்காச்சி பகுதியில் 148 மி.மீ., மாஞ்சோலையில் 132 மி.மீ. மழை பதிவானது. அதேபோல் பாபநா சத்தில் 39 மி.மீ., சேரன்மாதேவியில் 20.20 மி.மீ., மணிமுத்தாறில் 14.20 மி.மீ., அம்பையில் 3.60 மி.மீ. மழை பதிவானது.

தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 17 மி.மீ., சிவகிரி யில் 13 மி.மீ., கருப்பாநதி அணை பகுதியில் 9.50 மி.மீ. மழையும் பதி வானது. அதேபோல் தென்காசி, கடனாநதி, செங்கோட்டை ஆகிய இடங் களில் தலா 3 மில்லி மீட்டர் மழையும், ராமநதி அணை, சங்கரன்கோ வில் ஆகிய இடங்களில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com