

கரூர்,
கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்து வருகின்றது.
இந்த நிலையில் பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி சவுக்கு குச்சிகளை கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சவுக்கு குச்சிகளுக்கு பேருந்து நிலைய ஒப்பந்ததாரர் இரவேடு இரவாக கான்கிரீட் போட்டு உள்ளார். இன்று காலை இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.