பட்டாசு வெடித்ததில் தகராறு: வாலிபர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு

போடி அருகே வாலிபரை தாக்கிய 4 போ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பட்டாசு வெடித்ததில் தகராறு: வாலிபர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு
Published on

போடி அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டியைச் சேர்ந்தவர் அன்பு (வயது 27). கடந்த 24-ந் தேதி தீபாவளியன்று இவர், தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு பட்டாசு வெடிக்கக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்பு, தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வமுருகன், அவரது மனைவி ஜோதி, மகன்கள் அஜித் குமார், அரவிந்த் ஆகியோர் அவரை வழி மறித்து தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அன்பு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் செல்வமுருகன் உள்பட 4 பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com