ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
Published on

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-க்கான அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்திகனி சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக்கூடம், படித்துறை ஆகியவை அமைத்து தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் பவித்ரா, கிராம நிர்வாக அலுவலர் சந்திரலேகா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். முடிவில் ஊராட்சி செயலாளர் அன்பரசன் நன்றி கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com