தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்

தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,691 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 4,515 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6.42 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 38,093 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 885 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com