தமிழக ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழக ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

சென்னை,

கடந்த சில நாள்களுக்கு முன்னர், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 38 பேருக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் 38 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ ஆலோசனையின்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 7 நாள்களுக்கு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com