3 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
3 பேருக்கு கொரோனா
Published on

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுஇடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com