12 குழந்தைகள், 9 முதியோர் உள்பட தமிழகத்தில் 44 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 12 குழந்தைகள், 9 முதியோர் உள்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 குழந்தைகள், 9 முதியோர் உள்பட தமிழகத்தில் 44 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 30 ஆயிரத்து 430 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம் 44 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக கோவையில் 5 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், தஞ்சாவூரில் 2 பேரும் உள்பட 13 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல் உள்பட 24 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டவில்லை.

அதேபோல், அரியலூர், மயிலாடுதுறை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சிகிச்சையில் இருந்து அனைவரும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது, இந்த 7 மாவட்டங்களும் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

9 முதியோர் பாதிப்பு

12 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 9 முதியவர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 147 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் 6-வது நாளாக நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பும் இல்லை. மேலும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 74 பேர் டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 505 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com