போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
Published on

தஞ்சை,

தஞ்சையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தஞ்சையில் 2227 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தஞ்சையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மையம் கட்டப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தஞ்சையில் கோவிட் கேர் மையங்களில் 650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரம், உள்ளாட்சி துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com