தமிழகத்தில் 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 6 மையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் செலுத்தப்பட்டது. அந்த வகையில் முதல் நாளான நேற்று முன்தினம் மட்டும் 3 ஆயிரத்து 27 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டனர். மேலும் 99 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டனர்.

இதன்படி முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் நேற்று 158 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 6 மையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 847 பேருக்கு கோவிஷீல்டு மருந்துகளும், 183 பேருக்கு கோவேக்சின் மருந்துகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 5 ஆயிரத்து 874 பேருக்கு கோவிஷீல்டு மருந்துகளும், 282 பேருக்கு கோவேக்சின் மருந்துகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com