சேலம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.
சேலம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு
Published on

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 9 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் ஒருவருக்கும், சங்ககிரியில் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல், சென்னை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த தலா 2 பேரும், தர்மபுரியில் இருந்து வந்த ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு 3-வது கட்டமாக பரவ தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் தற்போது அதன் தாக்கம் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com