குடிசை வீட்டில் தீ விபத்து

நெமிலி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
குடிசை வீட்டில் தீ விபத்து
Published on

நெமிலியை அடுத்த பள்ளுர் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் வசித்துவருபவர் கலா (வயது 55). இவர் விவசாய கூலிவேலை செய்துவருகிறார். ஜாகீர் தண்டலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கலா செனறார். பின்னர் திரும்பி வந்தபோது திடீரென தனது குடிசைவீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அரக்கோணம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com