நாமக்கல்லில் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 4,300 மூட்டை பருத்தி ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது.
நாமக்கல்லில் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்
Published on

நாமக்கல்:

நாமக்கல்லில் நேற்று 4,300 மூட்டை பருத்தி ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 4,300 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ரூ.1.40 கோடிக்கு விற்பனை

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 269 முதல் ரூ.9 ஆயிரத்து 460 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.9 ஆயிரத்து 3 முதல் ரூ.9 ஆயிரத்து 900 வரையிலும், சுரபி ரக பருத்தி 9 ஆயிரத்து 69 முதல் ரூ.9 ஆயிரத்து 500 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 999 முதல் ரூ.7 ஆயிரத்து 399 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com