ராசிபுரத்தில்ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ராசிபுரத்தில்ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

ராசிபுரம்:

ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்தில் 3,705 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 2 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி 3,620 மூட்டைகளும், கொட்டு பருத்தி 85 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,989-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,670-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,890 முதல் அதிகபட்சமாக ரூ.7,799-க்கும் ஏலம் விடப்பட்டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com