கள்ளச்சாராய விவகாரம்: மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் புதிய டி.எஸ்.பி-ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com