நாட்டுக்கோழி விலை சரிவு; வியாபாரிகள் கவலை

பரமத்திவேலூர் நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுகோழிகள் விலை சரிவடைந்துள்ளது.
நாட்டுக்கோழி விலை சரிவு; வியாபாரிகள் கவலை
Published on

பரமத்திவேலூர்

நாட்டுக்கோழி சந்தை

பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான சண்டை மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் நாட்டுகோழிகள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை பரமத்திவேலூரில் நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகள் கொண்டு வரப்பட்டிருந்தது.

மேலும் நாட்டுக்கோழி சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில் கருஞ்சதை மயில் காகம், கருங்கண், கருங்காலி, கிளி மூக்கு, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. இங்கு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

விலை குறைந்தது

நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது. சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல்கள் ஒன்று ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ஒன்று ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

நாட்டுக்கோழிகள் விலை சரிவடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com