சேலம் சூரமங்கலத்தில் தம்பதி படுகொலை: போலீசார் விசாரணை


சேலம் சூரமங்கலத்தில் தம்பதி படுகொலை: போலீசார் விசாரணை
x

சேலத்தில் தம்பதி பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் கணவன், மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரமங்கலத்தில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி வித்யா. இவர்கள் இருவரையும் மர்ம நபர்கள் இன்று பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


1 More update

Next Story