மாரண்டஅள்ளி அருகேசரக்கு ஆட்டோ மோதி பசு செத்ததுடிரைவர் படுகாயம்

மாரண்டஅள்ளி அருகேசரக்கு ஆட்டோ மோதி பசு செத்ததுடிரைவர் படுகாயம்
Published on

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கணவன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). விவசாயி. இவருடைய வீடு கணவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. இவர் 8 மாதம் சினையாக உள்ள பசுவை வீட்டின் முன்புறம் கட்டியிருந்தார், இந்த நிலையில் நேற்று காலை பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனை அமானி மல்லாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கணவன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் முன் கட்டியிருந்த பசுவின் மீது மோதிவிட்டு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த சினை பசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com