

சென்னை,
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பிரிமியம் தொகை கட்டுவதற்கு கடந்த மாதம் 31-ந் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்கு தான் பயிர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர். மீதம் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை.
எதிர்பாராதவிதமாக இயற்கையின் சீற்றத்தால் இழப்பு ஏற்படுமானால், விவசாயிகள் பயிர் இழப்பீடு பெற முடியாமல் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள். எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். 2019-2020-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பு தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.