

வழிகாட்டுதல்கள்
தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் கன்வீனர்' எஸ்.சி.மொகந்தா, தமிழகத்தில் தங்கள் குழுமத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக அரசு ஊரடங்கினை வருகிற 31-ந்தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்துள்ளது. ஏ.டி.எம். மையங்கள் செயல்பட அனுமதி மற்றும் வங்கி சேவைகளை தவிர்த்து, 3-ல் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள வங்கிகளில் கீழ்கண்ட வழிகாட்டுதல்கள் 24-ந்தேதி (இன்று) முதல் 31-ந்தேதி வரை பின்பற்றப்படவேண்டும்.
மதியம் 2 மணி வரை
அதன் விவரம் வருமாறு:-
* வங்கி கிளைகளின் வர்த்தக நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என்பது தொடரும். வங்கி கிளைகளில் ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும்.
* நிர்வாக, கோட்ட, மண்டல அலுவலகங்கள் வழக்கமான பணி நேரங்களில் பணியாற்றவேண்டும்.
* வங்கிகள் சுழற்சி முறையில் 3-ல் ஒரு பங்கு பணியாளர்களை கொண்டு இயங்கவேண்டும்.
* பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். உள்பட பல்வேறு முறைகளில் பணம் அனுப்புதல், அரசு தொடர்பான வர்த்தகம், காசோலைகளை சரிபார்த்து வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை சேவைகளை வங்கி கிளைகள் வழங்கவேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
* ஏ.டி.எம். எந்திரம் உள்பட பண சுழற்சி சேவைகள் அனைத்து நேரங்களிலும் முழுமையாக இயங்குவதை வங்கிகள் உறுதி செய்யவேண்டும்.
* முககவசம் அணிதல், கைகளை சீரான இடைவெளியில் கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வங்கிகளில் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.
இந்த வழிகாட்டுதல்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.