நெல்லை தட்சணமாற நாடார் சங்க மகாசபை கூட்டம்

தெற்கு கள்ளிகுளத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க மகாசபை கூட்டம் நடந்தது.
நெல்லை தட்சணமாற நாடார் சங்க மகாசபை கூட்டம்
Published on

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் 57-வது மகாசபை கூட்டம், தெற்கு கள்ளிகுளத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார். துணை செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் வரவேற்று பேசினார். செயலாளர் டி.ராஜகுமார் நாடார் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஏ.சிவபாலன் நாடார் பேசுகையில், ''நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவள விழா கொண்டாட வேண்டும்'' என்றார். சமுதாய வளர்ச்சி பணிகள் குறித்து சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் பேசினர். நிகழ்ச்சிகளை காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் சங்க காரியக்கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள், சென்னை கிளை தலைவர் வி.செல்வராஜ் நாடார், செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நாடார், பொருளாளர் எம்.ஜெகதீசன் நாடார் மற்றும் சங்க ஆயுட்கால உறுப்பினர்கள், சமுதாய பெரியோர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். சங்க இயக்குனர் பி.எஸ்.கனிராஜ் நாடார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com