சாலையில் இறந்து கிடந்த மான்

சாலையில் இறந்து கிடந்த மான் மீட்கப்பட்டது.
சாலையில் இறந்து கிடந்த மான்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில்-வத்திராயிருப்பு சாலையில் உள்ள முனியாண்டி கோவில் விலக்கு அருகே சாலையில் ரத்தகாயங்களுடன் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று மானின் உடலை கைப்பற்றினர். சிறுத்தை, புலிகள் கடித்து மான் இறந்ததா? அல்லது சாலையை கடக்கும் போது வானத்தில் அடிபட்டு இறந்ததா? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com