காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை காவலர் சந்திரசேகர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூ.20 லட்சம் அரசு வேலை

நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தனது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com