

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் அய்யா வைகுண்டர் அவதாரபதி பின்புறம் உள்ள கடற்கரையில் சுமார் 3 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட கடல் பசு மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கடல் பசு மீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.