மத்தூர் அருகேலாரி மோதி முதியவர் சாவு

மத்தூர் அருகே லாரி மோதி முதியவர் இறந்தார்.
மத்தூர் அருகேலாரி மோதி முதியவர் சாவு
Published on

மத்தூர்

மத்தூர் அருகில் உள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது60). கூழ் வியாபாரி. இவர் நேற்று மொபட்டில் விற்பனைக்காக கூழ் எடுத்து சென்றார் அப்போது மத்தூர்- ஊத்தங்கரை சாலையில் சோனாரஅள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தணிகாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com