தவறி விழுந்த விவசாயி சாவு

கடமலைக்குண்டு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தவறி விழுந்த விவசாயி சாவு
Published on

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 54). விவசாயி. இவர், கடந்த 17-ந்தேதி குமணன்தொழுவில் வசிக்கும் தனது மகளை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் உத்தமபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கடமலைக்குண்டு அருகே சாலை வளைவில் திரும்பியபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com