சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசல் (வயது 39). இவருடைய தம்பி சைபில் சைக், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2 வாரங்களாக கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தனது தம்பியை பார்ப்பதற்காக வந்த குலாம் ரசல், சைபில் சைக் பணிபுரிந்த மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடிக்கு சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல், 10-வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com