நாய்கள் கடித்து மான் சாவு

நாய்கள் கடித்து மான் இறந்தது.
நாய்கள் கடித்து மான் சாவு
Published on

சிவகங்கை அருகே தமராக்கிய வடக்கு கிராமத்தில் உள்ள வயலில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் சிவகங்கை வனத்துறையினர் அங்கு சென்று அந்த மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், வழி தவறி ஊருக்குள் வந்த மானை நாய்கள் கடித்து குதறியதில் இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கால்நடை துறை அதிகாரிகள் அந்த மானை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மேலக்காடு வனப்பகுதியில் மான் உடல் புதைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com