நாய்கள் கடித்து மான் சாவு

நாய்கள் கடித்து மான் இறந்தது.
நாய்கள் கடித்து மான் சாவு
Published on

தேவகோட்டை

தேவகோட்டை ஒத்தக்கடை அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு புள்ளி மான் ஒன்று இரை தேடி வந்தது. இதை பார்த்த தெரு நாய்கள் அதை விரட்டி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது. கண்ணங்குடி சாலை ஓரத்தில் இறந்து கிடந்த அந்த மானை பார்த்தவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்து அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரையாரத்தில் புதைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com