நாய்கள் கடித்து மான் சாவு

அருப்புக்கோட்டை அருகே நாய்கள் கடித்து மான் இறந்தது.
நாய்கள் கடித்து மான் சாவு
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே பெரியநாயகபுரம் கிராமத்தில் ஆண் புள்ளி மான் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனச்சரக அலுவலர் கோவிந்தன், வனக்காப்பாளர் ஜெயச்சந்திரன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திரபிரபு ஆகியோர் மானின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் தெருநாய்கள் கடித்து உயிரிழந்தது தெரியவந்தது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com