கார் மோதி மான் செத்தது

வேப்பூரில் கார் மோதி மான் செத்தது.
கார் மோதி மான் செத்தது
Published on

ராமநத்தம், 

வேப்பூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் இருந்து நேற்று மான் ஒன்று வெளியேறி சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அப்போது வேப்பூர் தனியார் பள்ளி அருகில் உள்ள சாலையை கடக்க முயன்றபோது, வேப்பூரில் இருந்து சேலம் மார்க்கமாக சென்ற கார் ஒன்று மான் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த மான் பரிதாபமாக செத்தது. இதுபற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானை உடற்கூராய்வு செய்து அருகில் உள்ள காப்புக்காட்டில் புதைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com