ஸ்மார்ட் கார்டில் இறந்த கணவரின் பெயரை நீக்குவதற்கு பதிலாக மனைவியின் பெயர் நீக்கம்; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார்

ஸ்மார்ட் கார்டில் இறந்த கணவரின் பெயரை நீக்குவதற்கு பதிலாக மனைவியின் பெயர் நீக்கப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
ஸ்மார்ட் கார்டில் இறந்த கணவரின் பெயரை நீக்குவதற்கு பதிலாக மனைவியின் பெயர் நீக்கம்; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார்
Published on

பொன்னேரி அடுத்த செங்கழுநீர்மேடு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 33). இவரது கணவர் செங்கேணி கடந்த 05.02.2022-ல் உடல் நலக்குறைவால் இறந்தார். இந்நிலையில் ஸ்மார்ட் கார்டில் கணவர் பெயரை நீக்குவதற்காக பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரியிடம் அனிதா மனு அளித்து கணவர் இறப்பு சான்றிதழையும் கொடுத்தார்.

ஆனால் இறந்த கணவர் பெயரை நீக்குவதற்கு பதிலாக உயிரோடு இருக்கும் அனிதாவின் பெயரை நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்து வருகிறார். இதனையடுத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று அனிதா திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார்.

அந்த புகாரில், 'இறந்த எனது கணவர் பெயரை நீக்காமல், உயிரோடு இருக்கும் எனது பெயரை நீக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன். மேலும், தற்போது மகளிர் உரிமைத் திட்டம் ரூ.1000 பெறுவதற்காகவும் விண்ணப்பிக்கவும் முடியாமல் திணறி வருகிறேன். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com