பிளஸ் 2 முடித்து எவ்வித உயர்கல்வியையும் தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பிளஸ்-2 முடித்த மாணவர்களில்.எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேராத மாணவர்களின் விவரங்களைசேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்து எவ்வித உயர்கல்வியையும் தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை,

2021-22ம் ஆண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்களில்.எவ்வித உயர்கல்வி படைப்புகளிலும் சேராத மாணவர்களின் விவரங்களைசேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com