தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் ஆவடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜீவன் ஆனந்தன் (வயது 17) என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர். ஜீவன் ஆனந்தன் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். காவியா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஜீவன் ஆனந்தன் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று விட்ட நிலையில், ஜீவன் ஆனந்தன் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதையடுத்து, நேற்று மாலை பள்ளியிலிருந்து காவியா வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து காவியா கதவை தட்டியும் ஜீவன் திறக்காததால், சந்தேகமடைந்த காவியா ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஜீவன் ஆனந்தன் மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com